Sunday, January 22, 2012

தலைவலி !!

தலைவனின் தலைவலி !!
தந்தையின் தலைவலி !!

இரண்டிற்கும் வேறுபாடு 
இருக்கும் என்று 
இருக்கையில் இளைப்பாரும்
நான்....
தலைவனா ? தந்தையா ?
தலைவலியா ?

தலைவனாக இருக்க 
நான் தந்தையாக 
வேண்டிய கட்டாயம் 
உணர்ந்தேன் !!

தந்தையாக வழி நடத்த
தலைவனின் திறன் 
அறிய முற்ப்பட்டேன்.....

தந்தைக்குள் ஒரு 
தலைவனும்...
தலைவனுக்க்குள் ஒரு 
தந்தையும்...
ஒன்றிணைந்து 
இருக்கும் வரை 
நான் இளைப்பார
எனக்கு இருக்கை உண்டு !!!

அவை வேறுபட்டிருக்கும் 
பட்சத்தில் தலைவலி 
என்னுள் இளைப்பார 
என் இருக்கையை 
நான் இழக்க 
நேரிடும்.........

ஒரு தந்தையாக 
ஒரு தலைவனாக 
தினமும் தலைவலியுடன் 
வாழ்க்கை படகில்
வாழ்வையும் உலகையும்
ரசிக்கும் நான்.......

 










Thursday, April 14, 2011

நம் கைபேசி உரையாடல்!!!

என் உள்ளத்தில் உள்ள  உன் நினைவுகளின்  துடிப்பை 
என் உதடுகளின் அசைவுகளால் 
உன் செவி வழியே உன் மனதிற்க்கு உரைக்கும் 
ஓர் நெருங்கிய உரையாடல்
நம் கைபேசி உரையாடல்........

நம் முகங்கள் தொலைவினில் இருந்தாலும் 
நம் மூச்சு சத்தங்கள் மட்டுமே உரசிக்கொள்ளும் 
ஓர் இன்னிசை உரையாடல் 
நம் கைபேசி உரையாடல்....

கண்கள் தேடும், செவிகள் காத்திருக்கும் 
கைகள் ஆர்பரிக்கும், தூக்கம் குறையும் 
வார்த்தை பரிமாற்றங்களால் எண்ணங்களை 
பகிர்ந்துகொள்ளும் இர்மனம், ஒர்மனமாய் இணையும் 
எண்ணற்ற மாற்றங்கள் கொண்ட உரையாடல் 
நம் கைபேசி உரையாடல்....

Tuesday, March 22, 2011

பூதங்களே பூவாகவே இருங்கள்!!!

வானமே நீ கண் திற
விவசாயம் செழித்திட

பூமியே நீ பொறுமை காத்திடு
மக்கள் நலம் வாழா

நீரே நீ நிலைத்திடு
உயிரினங்கள் தழைத்திட

காற்றே நீ தவழ்ந்திரு
எங்கும் வசந்தம் வீசிட

நெருப்பே நீ ஜுவாலையாய் இரு
உலகத்தின் உழைப்புக்கு உதவிட

ஐம்பூதங்கள் சேர்வதே உலகம்
அவை புன்னகையுடன் இயங்குவதும்
பூதங்களாக சிரிப்பதும் மனித பூதங்களின் கையில்!!!
பூதங்களே பூவாகவே இருங்கள்!!!


Wednesday, February 16, 2011

நீ - காதல் vs காலம்

காதல் உணர்த்தியது நீ
அழகிய பெண் என்று
காலம் உணர்த்தியது  நீ
அழவைக்கும் பெண் என்று ......

Saturday, December 18, 2010

நீயும் என் உறவே.....

பாட்டி சொல்கையில் வியந்தேன்
தாத்தா சொல்கையில் மகிழ்ந்தேன்

அம்மா சொல்கையில் பயந்தேன்
அப்பா சொல்கையில் வளர்ந்தேன்

அண்ணன் சொல்கையில் வீரமுற்றேன்
தங்கை சொல்கையில் பாசமுற்றேன்

நண்பன் சொல்கையில் நட்புற்றேன்
காதலி சொல்கையில் மயக்கமுற்றேன்
மனைவி சொல்கையில் பக்குவமுற்றேன்

நான் முழு மனிதனாக
நீ எத்தனை பரிமானமுற்றாய்
என் வாழ்கை பயணத்தில், கதையே.....

கதைகள் நிறைந்த வாழ்வில்
வாழ்க்கை கதையில் எனக்கும்
ஒரு வாழும் பாத்திரம் தந்த கதையே, நீயும் என் உறவே.....

Saturday, December 11, 2010

உன்னிடம் இருப்பதாலா!!


இமை மூடியும் ஏன்
இந்த ஈரம் கண்களில்
மலர்கள் வாடிவிடுமாம்
ஈரம் இல்லை என்றால்!
பதித்திருந்தேன் என் கண்களில் உன் உருவம்!!
 
பகை வஞ்சம் சோகம்
மறந்தது என் நினைவு
மகிழ்ச்சி மற்றும் நிறைந்தது
வருடியது என் மனம்!
வைத்திருந்தேன் என் நினைவில் உன் நினைவை!!
 
பறக்கிறேன் வானில்
மிதக்கிறேன் தீயில்
எப்படி சாத்தியம்
இவை எல்லாம்!
உன் மின்னல் பார்வை என்னை தீண்டியதால்!!
 
துடிக்க தவறுகிறது
என் துடிப்பு
சுவாசிக்க மறக்கிறது
என் சுவாசம்!
ஒ என் இதயம் உன்னிடம் இருப்பதாலா!!

Monday, December 6, 2010

கவிங்கனாய் இருந்து போ !!

காதலனாய் காத்திருந்தேன் உனக்காக அன்று
இன்னும் பாது காத்து இருக்கிறேன் உன் நினைவாய்  இன்று
பேசிக்கொண்டே தொலைத்தேன் உறக்கத்தை அன்று
பேசிய வார்த்தைகள் மட்டும் என்னுள் உறக்கத்தில் இன்று
வானும் மண்ணும் போல நீயும் நானும் என நினைத்தேன்  அன்று
வானும் மண்ணும் சேராத துருவம் என உணர்ந்தேன் இன்று
உயிர் உள்ள செதுக்கிய சிற்பம் அழகு என்றிருந்தேன் அன்று
அழகிய சிற்ப்பங்களுக்கு உயிர் இருப்பது அவஸ்தை என்கிறேன் இன்று
இறகுகள் விரித்து பறந்தேன் கூட்டை மறந்த பறவையாக அன்று
இறகுகள் இருந்தும் பறப்பதை மறந்த பறவையாக  கூண்டுக்குள் இன்று
காலங்கள் கடந்து சென்றன கவிதையாய்  என் அனுமதியின்றி அன்று
அனுமதித்தது காலம் கவிங்கனாய் இருந்து போ சில காலம் நீயும் என்று